ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பிரியாவிடை விழா

இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை அளிக்கும் பிரியாவிடை விழா 2026 ஜனவரி 18 அன்று இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் இராணுவ மரியாதை மற்றும் வாழ்த்துக்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இராணுவ மரபுகளுக்கு இணங்க, அன்றைய நிகழ்வுகள் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் ஆரம்பமாகியன. பிரியாவிடை சம்பிரதாயங்களுக்கு இணங்க, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியை கௌரவிக்கும் வகையில் தேநீர் விருந்து மற்றும் பிரியாவிடை இரவு உணவு வழங்கப்பட்டது. இரவு உணவின் போது, இலங்கை இராணுவ பதவிநிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் விடைபெறும் சிரேஷ்ட அதிகாரியின் விதிவிலக்கான சேவையை பாராட்டி பிரியாவிடை உரையை வழங்கினார்.

இலங்கை இராணுவத்தில் தனது கடமைப் பயணத்தின் போது வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் உறுதுணைக்காக மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் படையணியின் அனைத்து அதிகாரிகள் மற்றும் இலங்கை பொறியியல் படையணி சேவை வனிதையர் கிளையின் உறுப்பினர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.