23rd October 2025
இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் போர்வீரர்கள் விவகாரம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் இராணுவ சேவை வனிதையர் பிரிவுடன் இணைந்து 58 வது காலாட் படைப்பிரிவின் தலைமையகத்தில் தொடர்ச்சியான மருத்துவத் திட்டங்களின் ஒரு பகுதியாக, புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் ஊனமுற்ற ஓய்வுபெற்ற போர்வீரர்களுக்கான மருத்துவ முகாமை 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி நடாத்தியது. புத்தளம் மாவட்டத்தில் வசிக்கும் இராணுவ வீரர்களின் சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களுடன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். வருகை தந்த அவர்களை மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.
இந்த நிகழ்வின் போது, இராணுவத் தளபதி மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்களின் ஏற்பாட்டில், 300 மூக்குகண்ணாடிகள், 15 சக்கர நாற்காலிகள், 100 ஊன்றுகோல்கள், 5 நடைபயிற்சி கருவிகள் மற்றும் 5 உதவி நடைபயிற்சி கருவிகள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாளமாக வழங்கப்பட்டன. இந்நிகழ்வு இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் எற்பாடு செய்யப்பட்டதுடன், இராணுவ சேவை வனிதையரால் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், ஓய்வுபெற்ற அங்கவீனமுற்றோர் மற்றும் மருத்துவ சேவை நிலைய ஊழியர்கள், தற்போது மருத்துவ சவால்களை எதிர்கொள்ளும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பயனடைந்தனர். இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவ ஆலோசனைகள், செயற்கை உறுப்பு பராமரிப்பு, தோல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேவை, மனநல ஆலோசனை மற்றும் ஊட்டச்சத்து வழிகாட்டுதல் ஆகியவை இடம்பெற்றன.
இராணுவ தலைமையக பணிப்பகங்களின் பணிப்பாளர்கள், பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகாரசபை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்பாளர்களின் தற்போதைய பிரச்சினைகள் குறித்து விசாரிக்க இந்நிகழ்வில் பங்கேற்றார்.