முதலாம் படை தளபதிக்கு படையினரால் பிரியாவிடை

முதலாம் படையின் 7வது தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2025 ஆகஸ்ட் 03 அன்று கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் முறையான இராணுவ நிகழ்வின் போது தனது கடமை விலகினார்.

வருகை தந்த முதலாம் படையின் தளபதிக்கு 3வது கஜபா படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அன்றைய தினத்தை நினைவுகூரும் வகையில், முதலாம் படைத் தளபதி குழு படம் எடுத்து கொண்டார்.

பின்னர் படையினருக்கு உரையாற்றிய அவர், அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.