ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

59 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 ஒக்டோபர் 08 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் பின்வருமாறு:

மேஜர் ஜெனரல் டி.ஆர்.என். ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவ கல்வியற் கல்லூரியில் பாடநெறி 08 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தரப் படையில் 1990 நவம்பர் 03 அம் திகதி பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். ரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவா பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர், 1992 நவம்பர் 14 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2024 மே 03 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

சிரேஷ்ட அதிகாரி 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வு பெறும் போது, அவர் 59 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியாக பதவி வகிக்கின்றார்.

சிரேஷ்ட அதிகாரி தனது பணிக்காலத்தில், 10 வது கஜபா படையணியின் குழு தளபதி, 10 வது கஜபா படையணியின் புலனாய்வு அதிகாரி, 10 வது கஜபா படையணியின் அதிகாரி கட்டளை, 10 வது கஜபா படையணியின் நிறைவேற்று அதிகாரி, காலாட் படை பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 2, 534 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் மேஜர் (நிர்வாகம் மற்றும் விடுதி), கஜபா படையணி தலைமையகத்தின் அதிகாரி கட்டளை (நிர்வாகம்), மருதானை அடிப்படை ஆயுதக் களஞ்சியத்தின் அதிகாரி கட்டளை (நிர்வாகம்), 10 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, ஹைட்டியில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை குழுவின் அதிகாரி கட்டளை, 22 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, 02 வது குழுத் தளபதி (14 வது காலாட் படைப்பிரிவு), இராணுவ தொழிற்பயிற்சி நிலையத்தின் கட்டளை அதிகாரி, விவசாயம் மற்றும் கால்நடைகள் பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 1, 56 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கேணல் (பொது பணிநிலை), 683 வது காலாட் பிரிகேடின் பதில் தளபதி, 681 வது காலாட் பிரிகேட் தளபதி, காணி மற்றும் விடுதி பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் மற்றும் அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளதுடன் தற்போது 59 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக பதவி வகிக்கின்றார்.

இலங்கை இராணுவத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் வீரம் மிக்க சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டது.

ரோந்துப் பயிற்சி, பீரங்கி கண்காணிப்புப் பயிற்சி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் பாடநெறி, படையணி கணக்காய்வு அதிகாரிகள் பாடநெறி மற்றும் படையணி நிர்வாகப் பாடநெறி உள்ளிட்ட ஏராளமான உள்ளூர் பாடநெறிகளை பயின்றுள்ளார். பாகிஸ்தானில் இளம் அதிகாரிகள் தந்திரோபாய பாடநெறி, இந்தியாவில் படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகள் (மோட்டார் லெக்) பாடநெறி, இந்தியாவில் கனிஷ்ட கட்டளை பாடநெறி, பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகளின் குடிமக்கள் பாதுகாப்புப் பாடநெறி மற்றும் உகாண்டாவில் ஐக்கிய நாடுகளின் பயிற்சியாளர்களுக்கான முதலுதவி பயிற்சி பாடநெறி ஆகிய வெளிநாட்டு பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.