2026-04-15
திகன நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இராணுவத்தினரால் தற்காலிக அணை
நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக, மகாவலி ஆற்றின் நீர்மட்டம் கணிசமான அளவு குறைந்துள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் கண்டி அரச அதிபர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், திகன பிரதேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 6 வது களப் பொறியியல் படையணி, 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 1 வது இலங்கை ரைபில் படையணியின் படையினர் 2026 ஏப்ரல் 07 முதல் 11 வரை 5,000க்கும் மேற்பட்ட மண் மூட்டைகளைப் பயன்படுத்தி ஒரு தற்காலிக அணையைக் கட்டியுள்ளனர்.