2026-06-04
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியினால் வெளிச்செல்லும் தளபதிக்கு பிரியாவிடை
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் படையினர், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் வெளிச்செல்லும் தளபதி மேஜர் ஜெனரல் உ.கே.டி.டி.பீ. உடுகம ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு 2026 ஜூன் 04 ஆம் திகதி தொண்டர் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை அளிக்கும் சம்பிரதாய விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
வருகை தந்ததும், வெளிச்செல்லும் தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர், மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய பீடபிப்ளியூவீ அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், பதவி விலகும் தளபதி, தளபதி அலுவலக வளாகத்தில் தனது படத்தைத் திறந்து வைத்தார். அந்த நாளுக்கு மேலும் நினைவுகளைச் சேர்க்கும் விதமாக, ஒரு குழுப் படம் எடுத்துக்கொள்வதற்காக அழைக்கப்பட்டார். அனைத்து நிலையினருக்கும் ஆற்றிய தனது உரையில், தனது பதவிக்காலத்தில் அனைத்துத் நிலையினரும் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பிற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி, வெளிச்செல்லும் தளபதிக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கினார். அதன்பின்னர், தலைமையகப் படையணியின் சார்ஜன் மேஜர், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகத்தில் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஒரு நினைவுப் பரிசை வழங்கினார். அனைத்துத் நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன. வெளிச்செல்லும் தளபதிக்கு அனைத்துத் நிலையினருடனும் கலந்துரையாட ஒரு வாய்ப்பை வழங்கியது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.