இராணுவதினத்தை முன்னிட்டு கதிர்காமம், கிரிவெஹெரவில்ம தவழிபாடுகள்

7th October 2017

எதிர்வரும் 68ஆவது இராணுவதினத்தைமுன்னிட்டு (ஒக்டோபர் 10) பலவாறான மதத் ஸ்தலங்களில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றவண்ணம் இருக்கின்றவேளை வெள்ளிக் கிழமை (06) கதிர்காமகிரிவிகாரையில் பௌத்தமதவழிபாடுகள் இடம் பெற்றன.

அந்தவகையில் இவ் வழிபாட்டுபூஜை நிகழ்வுகளில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் மற்றும் இராணுவ பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இராணுவப் படையினர் போன்ரோர் கலந்து கொண்டனர்.

இதன் போதுஇராணுவக் கொடிகள் போன்றன தெய்வ ஆசீர்வாதத்தை பெறும் நோக்கில் பூஜைகள் நிகழ்த்தப்பட்டன.

இதன் போதுகப்புறுக் பூஜை ,கிளம்பச பூஜைகள் மற்றும் 1500 விளக்குகளை ஏற்றி இப் பூஜை வழிபாடுகள் நன்கே ஆரம்பிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கிரிவெஹெர விகாரையின் விகாராதிபதியான கொபவக தம்மிந்த தேரர் அவர்களால் பௌத்த மத ஆசிகள் வழங்கப்பட்டதோடு மஹாசங்கதேரர்களுக்கு அடபிரிகரவும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியவர்கள் கதிர்காமக் கோவிலிற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

மேலும் அங்குஇராணுவக் கொடிகள் பூஜை வழிபாடுகளிற்காக எடுத்துச் செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தாமரைப் பூத் தட்டுக்கள் மற்றும் பழத் தட்டுகள் போன்ற இவ் வழிபாடுகளிற்காக கொண்டு செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியவர்களால் கிரிஹெரவிகாரையின் விகாராதிபதியவர்களுக்கு இவ் விகாரையின் மீள் நிர்மானப் பணிகளுக்கென நன்கொடையும்வழங்கப்பட்டது.

இவ் ஆலய வளாகத்தில் முருதன் எனும் பூஜை வழிபாடுகளும் தேங்காய் உடைத்தல் போன்ற பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றன. பூஜை வழிபாடுகளில் இராணுவத் தளபதியவர்களால் அட்டபிரிகர வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பஸ்நாயக்கநிலமேயான டி பிகுமாரகேஅவர்களுக்கு பண நன்கொடையும் இராணுவத் தளபதியவர்களால் வழங்கப்பட்டது.

அந்த வகையில் புத்தரின் இலங்கைக்கான 3ஆவது விஜயத்தின் போது மகாசேன மன்னால் கட்டப்பட்ட விகாரையாக கிரிவெஹெர விகாரை காணப்படுகின்றது.

|