68 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு கண்டியில் பௌத்த சமய நிகழ்வுகள்

29th September 2017

எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இராணுவ தினத்தை முன்னிட்டு கண்டி தலதா மாளிகையில் இம் மாதம் (28) ஆம் திகதி இராணுவ ஆசிர்வாத பௌத்த நிகழ்கள் இடம்பெறும்.

இந்த பௌத்த மத நிகழ்வு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களது தலைமையில் 68 பௌத்த மதகுருமாரது பங்களிப்புடன் இந்த இராணுவ ஆசிர்வாத பூஜைகள் தளதா மாளிகையில் இடம்பெற்றது.

இந்த பௌத்த நிகழ்வின் போது இராணுவ தளபதியின் பங்கேற்புடன் மல்லிகைப்பூ பூஜையூம் தானம் வழங்கலும் இடம்பெற்றன தியவாவா பௌத்த சமய சடங்குகளின் ஊடாக இராணுவ தளபதி இராணுவத்திற்கு ஆசிர்வாத கிடைக்கும் நோக்கத்தில் இந்த பூஜைகள் இடம்பெற்றது. இந்த பூஜையின் போது பிரதீப் நிலங்கப பண்டார திவவடன நிலமே தேரர் இராணுவத்தை ஆசிர்வதித்து பூஜைகளை நடத்தி இராணுவம் தொடர்பான உரையை ஆற்றினார்.

அஸ்கிரிய அத்தியாயத்தின் வராக்கொட ஸ்ரீ கன்னரநாத மகா நயாக தேரர், வெஸ்ட் வெண். அஸ்கிரிய அத்தியாயத்தின் அனமடுவே தர்மராதான அனாயாயக்க தேரர் உள்ளடக்கப்பட்ட 68 பௌத்த தேரர்களின் பங்கேற்புடன் தலதா மாலிகை மண்டபத்தில் இடம்பெறும். இந்த பூஜையின் போது நாட்டிற்காக உயிர் நீத்த இராணுவத்தினரை நினைவு கூர்ந்து பூஜைகள் இடம்பெற்று இறுதியில் பின்வெடம்ப புண்ணிய தானமும் இந்த பூஜையில் இடம்பெற்றது.

கண்டியில் இரண்டாம் நாள் சிறப்பம்சமாக இன்று மாலை 28 ஆம் திகதி ஸ்ரீ தலதா மாளிகையின் நுழைவாயிலின் அருகே இராணுவ ஆசிர்வாத கொடி நிகழ்வுகள் இராணுவத்தினரது பங்கேற்புடன் இடம்பெற்றது.

இலங்கையின் இராணுவ தொண்டர் படை, அனைத்து பாதுகாப்பு படைத் தலைமையகங்கள், அனைத்து படை பிரிவுகள், பயிற்சி முகாம்கள், படையணிகளின் கொடிகளை ஏந்திய வண்ணம் இராணுவ பிரதிநிதிகள் இந்த ஆசிர்வாத நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

இராணுவ தளபதி முன்னிலையில் இந்த கொடிகள் இராணுவ பிரதிநிதிகளினால் ஏந்தி வந்து இந்த ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன அதனை தொடர்ந்து வியாழக்கிழமை ஸ்ரீ தலதா மாளிகையில் 'கிலன்பஸ்ப பூஜா' (28) ஆம் திகதி பல்லேகமுவவில் உள்ள 11 படைப் பிரிவு தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் கலந்து கொண்டனர்.

|