பங்களாதேச தேசிய பாதுகாப்பு கல்லுாரி குழுவினர்கள் இராணுவ தளபதியை சந்திப்பு

15th August 2017

பங்களாதேச தேசிய பாதுகாப்பு கல்லுாரியின் குழுவினர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை (14)ஆம் திகதி நேற்றைய தினம் மதியம் இராணுவ தலைமையகத்தில் சந்தித்தனர்.

இந்த குழுவிற்கு தலைவராக மேஜர் ஜெனரல் எஸ்.எம் சவூயிடீன் அகமட், பிரிகேடியர் ஜெனரல் அபு தகர் முகமட் இப்ராகிம் சிரேஸ்ட பணிப்பாளராகவும்இ பிரிகேடியர் ஜெனரல் பைசிட் சர்வர்இ கொமடோர் எஸ் அஸ்லாம் பாவஷ் இராணுவ தளபதியுடன் முக்கியமான சந்திப்பை மேற்கொண்டனர்.

இந்த குழுவில் பங்களாதேசத்தைச் சேர்ந்த 21 இராணுவத்தினரும், 2 கடற்படையினரும், ஒரு விமானப்படை அங்கத்தவரும் 5 சிவில் பாதுகாப்பு , மீளாய்வு மற்றும் பீடத்தின் வெளிநாட்டு மாணவர்களும் கலந்து கொண்டனர். இந்த குழுவினர்களுக்கு இராணுவ தளபதியினால் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர, இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜி.வி ரவிபிரிய இராணுவ தளபதியின் சந்திப்பின் போது இணைந்திருந்தனர்.

இந்த தேசிய பாதுகாப்பு கல்லுாரியின் குழுவினருக்கு நடவடிக்கை பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த குணரத்ன கடந்த காலங்களில் இராணுவத்தினரால் பயங்கரவாதத்திற்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விளக்கத்தை இராணுவ தலைமையகத்தில் நடாத்தினார்.

|