இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
10th December 2024
இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் 16 வது தளபதியாக பிரிகேடியர் எம்கேஎல்ஏ டி சில்வா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 9 டிசம்பர் 2024 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதியை இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் வரவேற்றதுடன் முகாம் நுழைவாயில் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதன் பின்னர், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் சிரேஷ்ட அதிகாரி உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் வளாகத்தில் மரக்கன்று நாட்டப்பட்டதை தொடர்ந்து, படையினருக்கு உரையாற்றினர். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.