57 வது காலாட் படைப்பிரிவினால் மரம் நடுகை திட்டம்

15th October 2024

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 57 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜனசெத நிறுவனத்தைச் சேர்ந்த வண. துசித பிரியங்க பேராயர் மற்றும் குழுவினரின் உதவியுடன் மர நடுகை திட்டத்தினை 57 வது காலாட் படைப்பிரிவு முன்னெடுத்தது. 08 ஒக்டோபர் 2024 அன்று பாங்கொல்ல முகாமில் நடைபெற்ற நிகழ்வின் போது 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.