இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையரால் பனாகொடையில் கலைக் கண்காட்சியுடன் சிறுவர் தின கொண்டாட்டம்
10th October 2024
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு உலக சிறுவர் தினத்தை 2024 ஒக்டோபர் 4 ஆம் திகதி பனாகொடை ஸ்ரீ போதிராஜாராம விகாரையில் கலைக் கண்காட்சியுடன் கொண்டாடியது. இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 35 பிள்ளைகள் கலந்து கொண்டதுடன், பிள்ளைகள் மற்றும் பங்கேற்பாளர்களை ஈர்க்கும் வகையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், பரிசுப் பொதிகள் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கல் என்பன இடம் பெற்றன. இந்த விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.