இந்திய தூதுக்குழுவினர் பதவி நிலை பிரதானியை சந்திப்பு

14th October 2024

இந்தியா பாதுகாப்பு நிர்வாக கல்லூரியின் கேணல் கேதர் தத்தாத்ரயா குப்தே, (தூதுக்குழுவின் தலைவர்), குறூப் கெப்டன் திபேந்திர படோரியா, கேணல் குணால் ரமேஷ் லோனாரி மற்றும் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி ஆகியோர் 2024 ஒக்டோபர் 14 அன்று இராணுவத் தலைமையகத்தில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தனர்.

இந்த கலந்துரையாடலின் போது, இந்திய மற்றும் இலங்கை படையினர்களுக்கு இடையிலான உறவை வரலாற்று ரீதியாக வகைப்படுத்தும் வகையில் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வுடனான எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

சுமூகமான சந்திப்பின் நிறைவில், இலங்கை இராணுவத்தினரின் நல்லெண்ணத்தின் அடையாளமாக நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பீ குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களும் கலந்துகொண்டார்.