61 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு
14th October 2024
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பிரிகேடியர் கேடிபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதியாக மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 11 ஒக்டோபர் 2024 அன்று பூஸ்ஸவில் உள்ள 61 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட படைப்பிரிவின் தளபதி பணி நிலை அதிகாரிகளால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அவரது புதிய அலுவலகத்தில், மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதை குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
முகாம் வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்த அவர் குழு படம் எடுத்துகொண்டார். தொடர்ந்து அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். பின்னர், இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க படைப்பிரிவின் எதிர்காலத்திற்கான தனது நோக்கத்தை வெளிப்படுத்தி படையினருக்கு உரையாற்றினார். .
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.