12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு

3rd October 2024

12 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி படையினர் சின்னவளையன்கட்டு பிரதெசத்தின் தேவையுடைய குடும்பம் ஒன்றிற்காக புதிய வீட்டை நிர்மாணித்தனர். 02 ஒக்டோபர் 2024 அன்று 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களால் இந்த வீடு உத்தயோகபூர்வமாக பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.