இயந்திரவியல் காலாட் படையணியின் வெளிச்செல்லும் படைத் தளபதிக்கு பிரியாவிடை
27th September 2024
இயந்திரவியல் காலாட் படையணி, வெளிச்செல்லும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு 25 செப்டெம்பர் 2024 அன்று, தம்புலுஹல்மில்லவெ இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகத்தில் பிரியாவிடை வழங்கியது.
வருகை தந்த வெளிச்செல்லும் படையணியின் படைத் தளபதியை இயந்திரவியல் காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஏ.கே. பீரிஸ் ஆர்எஸ்பீ மற்றும் படையணியின் பேரவை உறுப்பினர்கள் வரவேற்றனர்.
சம்பிரதாயமான இராணுவ பிரியாவிடை நிகழ்வு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் ஆரம்பமானது. பின்னர் அவர் போர் வீரர்களின் நினைவுத்தூபியில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அணிவகுப்பு சதுக்கத்தில் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை கையளித்ததுடன், படையினருக்கு உரையாற்றினார். இந்நிகழ்வின் நிறைவாக படையணியின் படைத் தளபதியை கௌரவிக்கும் வகையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களினால் மரியாதை வழங்கப்பட்டது.