541 வது காலாட் பிரிகேட் படையினரால் புத்தகங்கள் வழங்கல்

17th September 2024

541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிவைசி பெர்னாண்டோ ஆர்டப்ளியூபீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் மன்/கல்லியடி அரச தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கல் மற்றும் மதிய உணவு விருந்து வழங்கல் என்பன 2024 செப்டம்பர் 09 அன்று இடம்பெற்றது. 541 காலாட் பிரிகேடின் 14வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாடசாலை பொருட்களுக்கான நிதியுதவியை ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி ஆர்எம்டீடிகே ரத்நாயக்க அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.