ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு
10th September 2024
இராணுவத் தலைமையகத்தின் தலைமைக் களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் எம்பீகே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் 09 செப்டம்பர் 2024 அன்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போதும், போருக்குப் பிந்தைய காலத்திலும், தனது பதவிக்காலம் முழுவதும் பல்வேறு சவாலான பாத்திரங்களில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான செயல்திறனுக்காகவும், அவரது பணிக்காலம் முழுவதும் அவரது குடும்பம் ஆற்றிய முக்கிய பங்கிற்கும் இராணுவத் தளபதி பாராட்டுக்களை தெரிவித்தார். அதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் எம்பீகே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி தனக்கு வழங்கிய உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு விசேட பாராட்டுச் சின்னமும் அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளும் வழங்கினார்.
மேஜர் ஜெனரல் எம்பீகே மதுரப்பெரும ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 1990 செப்டெம்பர் 07 திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி இல 01 இன் ஊடாக பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக்கொண்டார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி - தியத்தலாவ ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இரண்டாம் லெப்டினன் நிலையில் 13 செப்டம்பர் 1991 இல் இலங்கை பொறியியல் படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டு, 19 ஆகஸ்ட் 2023, அன்று மேஜர் ஜெனரல் பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 10 செப்டம்பர் 2024 இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.
5வது களப் பொறியியல் படையணியின் படை கட்டளையாளர் மற்றும் புலனாய்வு அதிகாரி, 9வது களப் பொறியியல் படையணியின் நிறைவேற்று அதிகாரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்வியற் கல்லூரியின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 91 ம் படை - 9வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், தொண்டர் படையணி பயிற்சிப் பாடசாலையின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 4 வது (தொ) பொறியியல் படையணியின் பணி நிலை அதிகாரி 2, 74 படை - 7வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, களப் பொறியியல் அலுவலகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1, மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளில் உள்ள ஐக்கிய நாடுகள் விமான கள பராமரிப்பு படைகளின் இலங்கை குழுவின் கட்டளை அதிகாரி, களப் பொறியியல் அலுவலகத்தின் ( திட்டங்கள் மற்றும் கொள்முதல்) பொதுப் பணி நிலை அதிகாரி 1, 9வது களப் பொறியியல் படையணியின் கட்டளை அதிகாரி, பதவி நிலை பிரதானி காரியலயத்தின் பணி நிலை அதிகாரி 1, சுதந்திரப் பணிமனையின் கட்டளை அதிகாரி, ஐக்கிய நாட்டு தென் சூடான் படையின் இராணுவத் தொடர்பு அதிகாரி, களப் பொறியியல் அலுவலகத்தின் கேணல் ஒருங்கிணைப்பு (பதில்), இலங்கை இராணுவப் பொறியியல் பாடசாலையின் தளபதி, 573 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை பொறியியல் படைணியின் நிலைய தளபதி, வி்டுதி மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இராணுவ தலைமையகத்தின் தலைமை களப் பொறியியலாளர் உட்பட பல்வேறு நியமனங்களை அவர் தனது பணிக்காலத்தில் வகித்துள்ளார்.
சேவையில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக சிரேஷ்ட அதிகாரிக்கு ரண சூர பதக்கம் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பாடநெறிகளை முடித்துள்ளார், குழு தளபதிகள் தந்திரோபாய பாடநெறி, அதிகாரிகளின் செயல்பாட்டு பணியாளர் கடமைகள் பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை அதிகாரி பாடநெறி, மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் முகாமை பாடநெறி, அதிகாரி பயிலிளவல் பயிற்சி பாடநெறி - பாகிஸ்தான், இளம் அதிகாரிகள் பொறியியல் பாடநெறி- பாகிஸ்தான், ஒருங்கிணைந்த அதிகாரிகள் வெடிகுண்டு அகற்றும் பாடநெறி - இந்தியா, மற்றும் ஐக்கிய நாட்டு சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பு பாடநெறி – இந்தோனேஷியா என்பவற்றைக் குறிப்பிடலாம்.
சிரேஷ்ட அதிகாரி தனது இராணுவக் கல்விக்கு மேலதிகமாக, பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரியில் இளங்கலை கலை கற்கை, களனி பல்கலைக்கழகத்தில் முதுகலை பாதுகாப்பு கற்கை மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மின் ஆளுமை வணிக நிர்வாக முதுகலை கற்கை போன்ற இராணுவம் அல்லாத பட்ட கற்கைகளையும் மேற்கொண்டுள்ளார்.