11 வது விஜயபாகு காலாட் படையணியினால் மகாவலி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு உதவி
1st September 2024
11 வது விஜயபாகு காலாட் படையணி படையினர் 28 ஆகஸ்ட் 2024 அன்று கரணவாய், மகாவலி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு விசேட மதிய உணவை வழங்கினர்.
11 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஈஜிஜேபீ எதிரிசிங்க யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இறுதியாக, பாலர் பாடசாலை மாணவர்களுக்கு எழுதுபொருட்களை பரிசாக வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.