சரண பார்வையற்றோர்களின் முதியோர் இல்லம் புனரமைப்பு

27th August 2024

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 12 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் பீகேடப்ளியூடப்ளியூஎம்ஜேஎஸ்பிடப்ளியூ பல்லேகும்புர ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினரால் அம்பலாந்தோட்டை தெஹிகஹலந்த சரண பார்வையற்றோர்களின் முதியோர் இல்லத்தின் கட்டிடம் புனரமைக்கப்பட்டது.

புனரமைப்புக்கு தேவையான பொருட்கள் மற்றும் வளங்கள் அனுசரனையாளர்களால் வழங்கப்பட்டது. மேலும், முதியோர் இல்லத்தின் முதியோர் மற்றும் ஊழியர்களுக்கு சுவையான மதிய உணவு மற்றும் பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.