யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை
3rd June 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து காணப்படும் தெற்கில் உள்ள மாணவர்களுக்கு சுமார் 5 இலட்சம் ருபா செலவில் பாடசாலை உபகரணங்கள் கடந்த வெள்ளிக் கிழமை (02) இராணுவத்தினரின் உதவியுடன் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மேலும் இப் பிரதேசத்தினைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தரம் 1 - 13 வரையிலான மொல்காவ குகுலேகங்க போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 400 பாடசாலை மாணவர்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலை உபகரணங்களை பகிர்ந்தளிப்பதற்காக இராணுவ பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க இராணுவ படைப் பிரிவினரால் இப் பொருட்களைப் பகிர்ந்தளிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டது.
இதன் போது இலங்கை குகுலேகங்க சமாதான நடவடிக்கைப் பயிற்ச்சி மத்திய நிலையம் (IPSOTSL) லெபனான் சமாதான நடவடிக்கைப் பயிற்ச்சி மத்திய நிலையம் (IPSOTSL) மற்றும் பாதுகாப்புப் படையினரின் இந் நிகழ்விற்கான பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.
|