ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களுக்கான பிரியாவிடை

21st August 2017

இலங்கை இராணுவப் பொறியியலாளர்ப் படையணியைச் சேர்ந்த பாதுகாப்பு படைகளின் பிரதானியான ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களுக்கு இப் படையணியினரால் பிரியாவிடை நிகழ்வானது கடந்த திங்கட் கிழமை (21) வழக்கப்பட்டது.

அந்த வகையில் தமது சேவையில் இருந்து முற்றுமுழுதாக விடைபெறும் இவ் ஜெனரல் அவர்களுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டதுடன் ,இந் நிகழ்வு பனாகொடையில் உள்ள இராணுவப் பொறியியலாளர்ப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

மேலும் இப் படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த ஜெனரல் அவர்களை பொறியியலாளர்ப் படை சார்பில் ,யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்கள் வரவேற்றார்.

அந்த வகையில் இவர் நாட்டிற்கு சிறந்த சேவையை வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வாறு விடைபெற்றுச் சென்ற ஜெனரல் அவர்களுக்கு இராணுவ அதிகாரிகள் மற்றும் படை வீரர்களால் இராணுவ “ஜய ஸ்ரீ” மரியாதையும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவப் படை வீரர்கள் போன;ரோர் கலந்து கொண்டனர்.

|