அமெரிக்க அமைதிகாக்கும் படையணியின் துாதுக்குழுவினர் இராணுவத் தளபதியைச் சந்திப்பு
2nd August 2017
ஐக்கிய அமெரிக்காவின் நிவ்யோக் தலைநகரத்தைச் சார்ந்த இராணுவ அமைதி காக்கும் படையினர் உள்ளடங்களான துாதுக்குழுவினர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.
கடந்த செவ்வாய்க் கிழமை (1) பிற்பகல் இடம் பெற்ற இச் சந்திப்பில் இராணுவத் தளபதியவர்கள் கடந்த ஐந்து வருட காலமாக ஐக்கிய அமெரிக்காவுடனான அமைதி காக்கும் நடவடிக்களை மேற்கொண்ட விதம் பற்றிய எடுத்துக் காட்டினை முன்வைத்தார்.
இச் சந்திப்பில் லெப்டினன்ட் கேணல் கால்ஸ் வாஸ் (துாதுக்ககுழுத் தலைவர் ) , லெப்டினன்ட் கேணல் டொங்லின் டொனமு, மேஜர் கால்ஸ் ரொக்ஜ்செட் , செல்வி பிருந்தா அமீரால், திரு ஜோர்ச் சோரஸ் , திரு பீட்டர் டொனல்சன் மேஜர் ஜெனரல் பியால் விக்கிரமரத்தின மற்றும் இராணுவ உதவி பதவிநிலை அதிகாரி போன்ரோர் கலந்து கொண்டனர்.
அதே வேளை ஐக்கிய அமெரிக்காவின மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (OHCHR) ஆலோசகர் திரு யூனா பெனான்டஸ் அவர்கள் இராணுவத் தளபதியைச் சந்தித்தார்.
|