59 வது படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2nd January 2024

விசேட படையணியின் மேஜர் ஜெனரல் டபிள்யூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது காலாட் படைப் பிரிவின் தளபதியாக 01 ஜனவரி திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய தளபதி பணிநிலை அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் அவருக்கு படையினரால் நுலைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அவர் மத அனுஷ்டானங்களுக்குப் பின்னர் தனது கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். அன்றைய நினைவுகளைச் சேர்க்கும் வகையில் வளாகத்தில் மரக்கன்று நட்டுவைத்தார். அவர் குழு படம் எடுத்து கொண்டதுடன் இராணுவ சம்பிரதாயங்களுக்கு இணங்க, அவர் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரையாற்றினார், அங்கு அவர் படைப்பிரிவுக்கான தனது எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்தியதுடன் அனைத்து நிலையினருக்கான தேநீர் விருந்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.