ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் இரத்ததானம் நன்கொடை

28th October 2017

யாழ் போதனா வைத்தியசாலையினால் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க ஊர்காவற்றுறை தள வைத்தியசாலையின் ஒன்பதாவது ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு அன்றைய தினம் 17 ஆவது கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த படையினர் நோயாளர்களுக்கு (25) ஆம் திகதி இரத்த தானத்தை வழங்கினார்கள்.

இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் ஏற்பாட்டில் 17 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் லக்ஷான் பெரேரா அவர்களது தலைமையில் மனிதாபிமான ரீதியில் இந்த படையணியின் 63 படை வீரர்களின் பங்களிப்புடன்; இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றன.

|