மல்லாவி கர்ப்பிணி மாத பெண்களுக்கு 65 படைப் பிரிவினால் உணவுப் பொதிகள்விநியோகம்

16th October 2017

68 ஆவது இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு 65 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன அவர்களது தலைமையில் மல்லாவியில் உள்ள கர்ப்பிணி மாத பெண்கள் 35 பேருக்கு உணவு பொதிகள் மல்லாவி வைத்திய அதிகாரி அலுவலகத்தில் (9) ஆம் திகதி திங்கட் கிழமை வழங்கப்பட்டது. மனிதாபிமான அம்சத்தை கருத்தில் கொண்டு இந்த உணவு பொதிகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு 66, 651, 652 மற்றும் 653 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதிகள் மல்லாவி மாவட்ட வைத்தியசாலையின் பிரதான மருத்துவ அதிகாரி டொக்டர் சுசீகரன் மற்றும் வைத்திய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

|