பலாலி விமான நிலையத்தை பார்வையிடச் சென்ற பாடசாலைச் சிறார்கள்

25th September 2017

வவுணியா சேனைப்புலவு உமையாழ் வித்தியாலயத்தின் பாடசாலைச் சிறார்கள் மற்றும் ஆசிரியர்கள் யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை பார்வையிட கடந்த வெள்ளிக் கிழமை (22) சென்றனர்.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் தலைமையில் இலங்கை விமானப் படையினரின் பங்களிப்போடு இவ் விமான நிலையத்திற்கு வருகை தந்தோரிற்கான ஒத்துழைப்பை வழங்கினர்.

அந்த வகையில் மேற்படி பாடசாலையைச் சேர்த்த 04 ஆசிரியர்கள் , 33மாணவர்கள் மற்றும் 28 பெற்றௌர்கள் கலந்து கொண்டனர்.

இவ் விமான நிலையத்தை பார்வையிட வருகை தந்தவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளை யாழ்பாண பாதுகாப்பு படைத் தளபதிக்கு வழங்கினர்.

|