இராணுவத்தினருக்கு வாழ்க்கை திறன் , மதுபாணம் மற்றும் போதை தொடர்பான கருத்தரங்கு
20th September 2017
இராணுவ உளவியல் பணியகம் மற்றும் மதுபாணம் மற்றும் போதை தகவல் மையம் இணைந்து இராணுவத்தின் உளவியல் செயற்பாடுகள் தொடர்பாக நிகழ்ச்சி திட்டம் பனாகொடை இராணுவ பொது சேவை படையணி தலைமையகத்தில் (20) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.
இந்த கருத்தரங்கில் இராணுவ 5 அதிகாரிகளும், 191 படை வீரர்களும் கலந்து கொண்டனர். இராணுவ மருத்துவமனையில் மனநல மருத்துவ பிரிவின் மூத்த உளவியலாளர் மேஜர் யூஎஸ்பி மல்லவராச்சி அவர்கள் ‘வாழ்க்கை திறன் மற்றும் உந்துதல்’ போன்ற விரிவுரைகளையும், மதுபாணம் மற்றும் போதை தகவல் மையத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அதிகாரி திரு அஜித் நவாகமுவ அவர்களும் இராணுவத்தினருக்கு சிறந்த விரிவுரைகளை ஆற்றினார்கள்.
|