பிரித்தானிய உயர் ஸ்தானிகர் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்
31st August 2017
இலங்கை மற்றும் மாலதீவுக்கான உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டவூரிஸ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு (29)ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வருகை தந்தனர்.
.இவரை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் காரியகரவனவின் சார்பாக 57ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வரவேற்றார்.
பின்பு இவர்கள் இருவருக்கும் இடையில் கிளிநொச்சியில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இறுதியில் 57ஆவது படைப் பிரிவு தளபதியினால் இந்த உயர் ஸ்தானியருக்கு நினைவு பரி வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விஷேட பிரமுகர்கள் கையொப்பமிடும் புத்தகத்தில் தனது வருகையையிட்டு உயர் ஸ்தானிகர் கையொப்பமிட்டார்.
|