2017-07-05 09:14:54
இராணுவ தலைமையக இராணுவ தளபதி அலுவலகத்தில் இன்று (04)ஆம் திகதி காலை நடைபெற்ற 21ஆவது இராணுவ தளபதியான ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களினால் வாழ்த்துக்கள் கூறி புதிய இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இராணுவ தளபதி பதவியை உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.
2017-07-03 14:10:40
யாழ்ப்பாண மாவட்ட மக்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல் வாதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் உட்பட தயிட்டி கிராம சேவகர் பிரிவிற்கு உரிய 54 ஏக்கர் இடம் நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு திங்கட் கிழமை (03) திகதி வழங்கப்பட்டது.
2017-06-30 07:47:48
இராணுவ தளபதி ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா பாதுகாப்பு பிரதம பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக வியாழக்கிழமை (29)ஆம் திகதி சமய அனுஸ்டானங்களுடன் பண்டாரநாயக சர்வதேச மண்டபசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள பாதுகாப்பு பதவிநிலை அலுவலகத்தில் தனது கடமையை பொறுப்பேற்றார்.
2017-06-28 13:00:23
இராணுவத் தளபதி ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களின் ஜெனரல் உயர் பதவி நியமனத்தினை முன்னிட்டுஇராணுவ மரியாதை அணிவகுப்பு நிகழ்வானது இன்றய தினம் காலை வேளை (28) வியாழக் கிழமை மிக விமரிசையாக பாதுகாப்பு அமைச்சில் இடம் பெற்றது.
2017-06-27 18:33:39
முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2017 ஜீன் மாதம் 27ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவத்தின் 21ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா (ஆர்டபிள்யூபீ விஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ) அவர்கள் இராணுவ ஜெனரல் பதவிநிலை மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
2017-06-23 16:22:21
இலங்கைக்கான பாகிஸ்தான் துாதரகத்தில் கடமை புரிந்து விடைபெற்றுச் செல்லும் பாதுகாப்பு ஆலோசகரான கேர்ணல் முகமட் ரஜீல் இர்ஷாட் காண் வெள்ளிக்கிழமை (23) இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களை சந்தித்தார்.
2017-06-22 16:02:55
நாட்டில் இதுவரை 12,76,898 நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலக்கண்ணி வெடிகள் அபாயமற்ற பகுதியாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.
2017-06-18 13:07:26
இலங்கை இராணுவ எகடமியில் பயிற்ச்சியை முடித்த 60 கெடெற் அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வு நேற்றைய தினம் தியதலாவையில் இடம்பெற்றது. இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா அவர்களது அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ ருவான் விஜேவர்த்தன வருகை தந்தார்.
2017-06-15 17:18:03
முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள வீரர்களது சேவையை பாராட்டும் பொருட்டு நல்லினக்க சக்தி கலாச்சார நிகழ்வு மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் மே மாதம் (14) ஆம் திகதி மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம் பெற்றது.
2017-06-14 16:40:57
தமது சேவையிலிருந்து ஓய்வுபெற தயாராகும் பாதுகாப்பு படையின் பதவிநிலை பிரதானியான எயார் சீப் மார்சல் கோலிதகுணதிலகஅவர்கள் புதன்கிழமை (14) காலைவேளை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா அவர்களை இராணுவத் தலைமையத்தில் சந்தித்தார்.