2023-06-03 00:23:36
ஒரு புதிய நாகரிகத்தை கொண்டு வந்த புனித பொசன் பௌர்ணமி தினத்தின் ஆசீர்வாதங்கள் நம் அனைவருக்கும் பலம் கொடுக்கட்டும் மற்றும் நம் தாய்நாட்டை செழிக்கச் செய்யட்டும்! இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு இந்த சிறப்பு நந்நாளில் உன்னதமான சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
2023-06-01 21:05:31
2023 ஜூன் 1 ம் திகதி 24வது இராணுவத் தளபதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பதவியேற்று முதலாவது ஆண்டு நிறைவாகின்றது. அவரின் கட்டளை மற்றும் தலைமையானது இலங்கை இராணுவத்தின் வளர்ச்சிக்கு முற்போக்கான பங்களிப்பை வழங்கியுள்ளது. தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்கள், வீரர்களின் நலன், வளம் மற்றும் நிதி முகாமைத்துவ உத்திகளை மேம்படுத்துதல், இராணுவ அமைப்புகளை மறுசீரமைப்பு செய்தல் போன்ற பல துறைகளில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
2023-05-28 17:22:02
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர், மே 2009 க்கு முன்னர் தாய்நாட்டிற்காக அங்கவீனமடைந்த போர் வீரர்களை கம்புருப்பிட்டிய 'அபிமன்சல - 02' விடுதிக்கு சனிக்கிழமை (மே 27) பார்வையிடச் சென்றதுடன், நல விடுதியில் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பெற்று வரும் போர் வீரர்களுடன் சில மணி நேரம் செலவிட்டு நலம் விசாரித்தனர்.
2023-05-26 11:03:27
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் (18) காலை இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் இராணுவ ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தினால் தொகுக்கப்பட்ட 'சிறப்பு நடவடிக்கைப் படை' கோட்பாடு, நான்கு இராணுவ கள கையேடுகள் மற்றும் புலனாய்வு தொடர்பான 'பொது பணியாளர்கள் வெளியீடு' ஆகியவற்றின் முதல் பிரதிகளை பெற்றுக்கொண்டார்.
2023-05-19 18:44:00
எல்ரீரீஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தலின் போது இந்நுயிரை நீத்த 28,619 போர்வீரர்களின் வீரத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் 'வெற்றி நாள்' என்றழைக்கப்படும் தேசிய போர்வீரர் தினத்தின் 14 வது ஆண்டு நினைவு தினம் இன்று (மே 19) பிற்பகல் சமயம் நிகழ்வுகளுக்கு மத்தியில் கௌரவமாக நினைவு கூறப்பட்டது. முப்படைகளின் சேனாதிபதி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
2023-05-18 11:59:48
நாட்டின் ஒருமைபாடு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்ததின் போது தமது இன்னுயிரை நீத்த போர்வீரர்களின் வீரத்தை போற்றும் வெற்றி தினமென அழைக்கபடும் தேசிய போர் வீரர் தினம் மே 19 பத்தரமுல்ல போர்வீரர் நினைவுத்தூபியில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நினைவுகூரப்படவுள்ளது. இந் நிகழ்வில் அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி, முப்படைத் தளபதிகள், உயிர் நீத்த போர்வீரர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்துகொள்வர்.
2023-05-05 00:00:01
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த மும்மணிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் தினத்தில் அனைத்து இலங்கையர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் நலம் மற்றும் மகிழ்ச்சி மிக்க 'வெசாக்' வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
2023-05-04 19:35:46
கௌரவ அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழுவினருடன் புதன்கிழமை (3) மாலை கங்காராம 'பௌத்த ரஷ்மி வெசாக்' வலயத்தின் சம்பிரதாய திறப்பு விழாவில் கலந்து கொண்டார். வெசாக் வாரத்தில் (4-10) காட்சிப்படுத்துவதற்காக இராணுவத்தினர் பல வண்ணமயமான, அலங்கார மற்றும் ஆக்கப்பூர்வமான நிர்மாணங்களை வடிவமைத்துள்ளனர்...
2023-05-03 18:46:50
இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி அவர்கள் புதன்கிழமை (3) காலை இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்...
2023-04-24 18:03:02
யுத்தத்தின் போது நிரந்தரமாக காயமடைந்த போர் வீரர்கள் வசிக்கும் அத்திட்டிய 'மிஹிந்து செத் மெதுர'வில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு நிகழ்வு திங்கட்கிழமை (24) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தலைமையல் இடம் பெற்றது...