உலக சுற்றாடல் தினத்தைக் குறிக்கும் வகையில், தூய இலங்கை திட்டத்திற்கு இணங்க, 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல்' என்ற கருப்பொருளின் கீழ், 2025 ஜூன் 05, அன்று இராணுவத் தலைமையகத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முயற்சி சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான சமூகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டமையப்பட்டது. அதன்படி, 2025 மே 30 முதல் ஜூன் 05, வரையிலான வாரம் சுற்றாடல் வாரமாக அறிவிக்கப்பட்டிருந்தது.