19th February 2024 17:02:21 Hours
இராணுவத்தின் அண்மையில் நிலை உயர்வு பெற்ற நான்கு மேஜர் ஜெனரல்கள் இன்று (19 பெப்ரவரி 2024) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுடனான மரியாதைக்குறிய சந்திப்பின் போது, தளபதியிடமிருந்து அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டனர்.
புதிதாக நிலை உயர்வு பெற்ற இலங்கை சமிக்ஞைப் படைணியின் மேஜர் ஜெனரல் சி.பீ. அரங்கல்ல பீஎஸ்சி, கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் பீ.கே.எஸ். நந்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி, இலங்கை சமிக்ஞைப் படைணியின் மேஜர் ஜெனரல் பி.ஐ அஸ்ஸலராட்சி யூஎஸ்பீ பீஎஸ்சி பீடிஎஸ்சி மற்றும் இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டி.சி.ஏ. விக்கிரமசிங்க யூஎஸ்பீ யூஎஸ்ஏசிஜிஎஸ்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த, புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவத் தளபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சுமுகமான உரையாடலுக்குப் பிறகு, இராணுவத் தளபதி அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு நட்சத்திர ஜெனரலுக்கான அதிகார வாளினை வழங்கினார். இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்த அந்த அதிகாரிகள், நிகழ்வின் ஞாபகமாக படங்கள் எடுத்துக்கொண்டனர்.