09th February 2024 20:39:53 Hours
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்.எம் அவர்கள் 09 பெப்ரவரி 2024 அன்று இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களை சந்தித்தார்.
கலந்துரையாடலின் போது, உதவி பாதுகாப்பு ஆலோசகருடன் இராணுவ பதவி நிலை பிரதானி தனது எதிர்கால திட்டங்களைபகிர்ந்து கொண்டார். இரு நாட்டு ஆயுதப் படைகளுக்கும் இடையே நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வின் வலுவான பிணைப்புகளை இருவரும் கலந்துரையாடினர்.
இலங்கை இராணுவத்தினருக்கான பயிற்சித் திட்டங்களை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், கூட்டு இராணுவப் பயிற்சிகள், பயிற்றுவிப்பாளர் பரிமாற்றங்கள் மற்றும் ஒற்றுமையான ஏனைய விடயங்கள் குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.
சந்திப்பின் முடிவில், இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தின் அடையாளமாக உதவி பாதுகாப்பு ஆலோசகருக்கு இராணுவ பதவி நிலை பிரதானி விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.