Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th January 2024 23:06:18 Hours

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையினருக்கு உரை

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) கொஸ்கம இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை சந்தித்தார்.

நுழைவாயிலை வந்தடைந்தவுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ மற்றும் மேஜர் ஜெனரல் எம்டீகேஆர் சில்வா கேஎஸ்பீ ஆகியோர் வரவேற்றனர். வருகை தந்த அமைச்சர் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக வளாகத்தில் உள்ள கேப்டன் சாலியஅலாதெனியவின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விஜயத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து, அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் தனது உரையின் போது, வீரமரணம் அடைந்த அனைத்து போர்வீரர்களுக்கும் மரியாதை செலுத்தியதுடன், இலங்கை இராணுவத்தின் தற்போதைய பங்கு மற்றும் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

உரையின் இறுதியில் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் அதிகாரிகளுக்கு உரையாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவரது உரையைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு விசேட நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

பின்னர், இராஜாங்க அமைச்சர், தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்பதற்கு முன்னர் முகாம் வளாகத்தினுள் மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன் அங்கு அவர் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் தனித்தனியாக சிறிது நேரம் பேசினார். அவர் புறப்படுவதற்கு முன்னர் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதியதுடன் சில குழு படங்களையும் எடுத்துக்கொண்டார்.