05th January 2024 19:53:47 Hours
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் அண்மையில் நியமிக்கப்பட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி எஸ்.எம் அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை வெள்ளிக்கிழமை (ஜனவரி 05) காலை இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இடம்பெற்ற சந்திப்பின் போது, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே புதிய உதவி பாதுகாப்பு ஆலோசகருடன் சில கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார், மேலும் இரு நாட்டு படைகளுக்கும் இடையில் நிலவும் நல்லெண்ணம், ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை இருவரும் நினைவு கூர்ந்தனர்.
சுமூகமான சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புதிய உதவி பாதுகாப்பு ஆலோசகருக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கி இலங்கை இராணுவத்தின் நல்லெண்ணத்தை அடையாளப்படுத்தினார்.