Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd January 2024 15:40:58 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் 54 வது தளபதியாக மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 01 ஜனவரி 2024 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியை இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி வரவேற்றதுடன், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் தளபதி மறைந்த கெப்டன் சாலிய அலதெனிய பீடபிள்யூவீ அவர்களின் நினைவுத்தூபியில் உயிர்நீத்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினரால் தளபதியை கௌரவிக்கும் வகையில் கௌரவமான அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தனது அலுவலகத்தில் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்த்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொழுத்திட்டார்.

தொடர்ந்து, மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்த்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் 2024 புத்தாண்டு கொடி ஏற்றல், அரச பிரமாணம் வாசித்தல், தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைத்தல், தளபதியின் புத்தாண்டு உரை ஆகியவற்றுடன் தனது பணியை ஆரம்பித்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டு, புதிய தளபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.