Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2023 19:50:20 Hours

7 வது இராணுவ புலனாய்வுப் படையினரால் நிவாரணப் பொதிகள் விநியோகம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 22 வது காலாட் படைப்பிரிவின் 222 வது காலாட் பிரிகேடின் 7 வது இராணுவ புலனாய்வுப் படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் சேருநுவர பிரதேச செயலக வளாகத்தில் சேருநுவர, தோப்பூர் மற்றும் கிளிவெட்டி பிரதேசங்களில் வசிக்கும் 25 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 4000/= ரூபா பெறுமதியான 25 அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகளை சனிக்கிழமை (மார்ச் 25) விநியோகித்தனர்.

222 வது காலாட் பிரிகேடின் படையினர் மற்றும் 7 வது இராணுவ புலனாய்வுப் படையினர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் கனடாவில் வசிக்கும் திரு. ராஜ் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வழங்கிய அனுசரணையுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

7 வது இராணுவ புலனாய்வுப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்டிசிடி மாதரகே, 222 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சாலிய டயஸ் மற்றும் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டத்தை முன்னெடுத்தனர். மேலும், கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் இத்திட்டத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் 222 வது காலாட் பிரிகேட் தளபதி கலந்து கொண்டதுடன், 7 வது இராணுவ புலனாய்வுப் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள், நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.