Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th January 2023 20:57:20 Hours

மேற்கு படையினரின் உதவியுடன் கொலன்னாவையில் வேரோடு சரிந்த மரம் அகற்றல்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 144 வது பிரிகேடின் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினர் புதன்கிழமை (ஜனவரி 25) கொலன்னாவ பிரதேச செயலகத்திற்கு அருகில் முறிந்து வீழுந்த மரத்தினால் கொலன்னாவை - இராஜகிரிய வீதி போக்குவரத்து தடைபட்டிருந்ததை சீர் செய்ய படையினர் தனது ஒத்துழைப்பை வழங்கினர்.

2 வது (தொ) இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் படை குழு தேவை குறித்து தகவலறிந்த இடத்திற்கு விரைந்துடன் விமானப்படை, பொலிஸ், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பிரதேசவாசிகளின் ஆதரவுடன் விழுந்திருந்த மரத்தை அகற்றும் பணிக்கு ஒத்துழைப்பை வழங்கினார்.

மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் 144 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் விந்தன கொடித்துவக்கு மற்றும் 2 வது (தொ) இலங்கை இலோசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்ஏஏ ரணவக்க ஆகியோர் படையினரின் பணிகளை மேற்பார்வையிட்டனர்.