27th September 2022 16:54:51 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக கொஸ்கமவில் உள்ள இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையகத்தில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களின் சேவைகளை பாராட்டும் வகையில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பாராட்டு விழாவின் போது அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையகத்தின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் துஷார சில்வா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்திற்குள் பணியாற்றும் சிவில் ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டினார்.அவர் அவர்களை ஒரு இலங்கை இராணுவ தொண்டர் படை தலைமையக குடும்பத்தின் உறுப்பினர்களாக ஒப்பிட்டு காட்டினார்,
நடைபெற்ற விழாவில் முப்பத்தொரு சிவில் ஊழியர்களுக்கு பிரதி தளபதி, பயிற்சி பரிசோதகர், பிரிகேடியர் வழங்கள் மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் ஆகியோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொதிகளை வழங்கினர்.
இலங்கை இராணுவ தொண்டர் படையில் உள்ள நலன்புரி கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இணைந்திருந்தனர்.