Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th September 2022 00:09:45 Hours

தொட்டலங்க, கஜ்ஜிமாவத்தை பகுதியில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு உதவிய இராணுவத்தினர்

இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் பேரில் கொழும்பு 15, தொட்டலங்க கஜ்ஜிமாவத்தை வீடுகளில் வரிசையாக தீப்பிடித்து ஏற்பட்ட பாரிய தீயைக் கட்டுப்படுத்துவதற்கு இராணுவத்தினர் (27) மாலை அவ்விடத்துக்கு சென்றனர்.

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது படைப்பிரிவின் கீழுள்ள 142 வது பிரிகேடின் 7 வது கெமுனு ஹேவா படையணியின் நூற்றுக்கணக்கான படையினர் உடனடியாக கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் பிரிவின் படையினருடன் இணைந்து தீயணைக்கும் பணியில் கலந்து கொண்டனர்.

142 வது பிரிகேட் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, கட்டுப்பாட்டுப் பணிகளுக்கு உதவும் படையினர்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டது.

அவசரகாலத் தேவை குறித்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் , உடனடியாக 142 வது பிரிடே் தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி ஆகியோருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உரிய பகுதிக்கு படையினர்களை அனுப்புமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.