22nd June 2022 18:20:26 Hours
வண. தலகல சுமணரதன தேரரின் தலகல ஸ்ரீ சித்தாஹர்த்த அறக்கட்டளை மற்றும் களுத்துறை சாசனாரக்ஷ நிலையத்தின் அனுசரணையுடன் மத்திய பாதுகாப்பு படை தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவினால் 200 ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நலச்செயற்திட்டம் ஜூன் 17 அன்று மொனராகலை பொது நூலகத்தில் நடைப்பெற்றது.
இந்த கஸ்ட பிரதேசத்தில் வறுமையில் வாடும் மக்களின் பொருளாதாரச் சிரமங்களைக் குறைக்கும் வகையில், 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்களால் 121 வது பிரிகேட் தளபதி மற்றும் சில அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், படையினர் மற்றும் அரச அதிகாரிகள் பங்குபற்றினர்.