Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd June 2022 20:41:20 Hours

கஜபா படையணியின் முன்னாள் போர்வீரர்கள் சங்க உறுப்பினர்கள் இராணுவ தளபதியை சந்திப்பு

கஜபா படையணி முன்னாள் போர்வீரர்கள் சங்கத்தின் மூன்று பேர் கொண்ட குழு ஒன்று, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை புதன்கிழமை (22) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்து சங்கத்தின் பணிகளை அவருக்கு விளக்கியதுடன், எதிர்கால செயல்பாடுகள் எவ்வாறு திட்டமிடப்பட வேண்டும் என்பது குறித்தும் அவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டனர்.

கஜபா முன்னாள் போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் லெப்டினன் கேணல் தீபால் சுபசிங்க (ஓய்வு), கஜபா மன்னாள் போர்வீரர்கள் சங்கத்தின் செயலாளர் லெப்டினன் கேணல் சி.ஜே.எஸ் வீரகோன்(ஓய்வு) மற்றும் கஜபா முன்னாள் போர்வீரர்கள் சங்கத்தின் பொருளாளர் மேஜர் சி டி சில்வா (ஓய்வு) ஆகியோர் மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது இராணுவத் தளபதி ஜெனரல் விகும் லியனகே அவர்களுக்கு சங்கத்தின் நோக்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் நலன்களுக்காக எவ்வாறு செயற்படும் என்பதை விளக்கினர்.

சங்கத்தின் வளர்ச்சிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த இராணுவத் தளபதி, படையணியின் படைத் தளபதி என்ற வகையில் அவர்களுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்ததுடன், அதன் நலன்புரிப் திட்டங்களை மேலும் மேம்படுத்துமாறு தெரிவித்துக் கொண்டார். சங்கம் அதன் எதிர்காலத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது, கஜபா படையணி உறுப்பினர்களுக்கும் அந்த அன்பழிப்பு தொகைகளை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறும் அவர் அவர்களிடம் கூறினார்.

சுமூகமான கலந்துரையாடலின் முடிவில், இராணுவத் தளபதி அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கி அவர்களின் திட்டம் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.