Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd June 2022 18:17:43 Hours

52 வது படைப்பிரிவின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்

52 வது படைப்பிரிவின் 29 வது தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்கள் திங்கட்கிழமை (20) மிருசுவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நிகழ்வின் ஆரம்பத்தில், தலைமையக வளாகத்திற்கு வருகைதந்த புதிய தளபதிக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 15 வது (தொ) கஜபா படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புதிதாக நியமிக்கப்பட்ட புதிய தளபதி புத்த பிக்குகளின் 'செத் பிரித்' பராயணங்களுக்கு மத்தியில், புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக, புதிய தளபதி தனது சம்பிரதாய உரையினை படையினருக்கு வழங்கியதை தொடர்ந்து புதிய தளபதி வளாகத்தில் மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார். அன்றைய நிகழ்வில் 521, 522 வது மற்றும் 523 வது பிரிகேட் தளபதிகள், பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

தற்பொழுது 53 வது படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்களுக்கு பதிலாகவே இவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.