21st June 2022 12:58:30 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 56 வது படைப்பிரிவின் 562 பிரிகேட் படையினர் 2022 ஜூன் 17 ஆம் திகதி ஈச்சங்குளம் பாலர் பாடசாலையின் சிரார்களுக்கு அவர்களின் வருடாந்த விளையாட்டு விழாவின் போது மதிய உணவு வழங்கினர்.
பாதுகாப்புப் படையினர் மற்றும் அப்பகுதி சமூகத்தினரிடையே நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக சுமார் பதினாறு பிள்ளைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு படையினரால் தமது சொந்த பணத்தில் இந்த உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க, 56 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமன் லியனகே மற்றும் 562 வது பிரிகேட் தளபதி கேணல் ஜே.எம்.ஏ. ஜயசேகர ஆகியோர் நிகழ்வின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.