Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd June 2022 12:46:01 Hours

மத்திய பாதுகாப்பு படை தலைமையக படையினரால் இலவச உலர் உணவு வழங்கல்

அம்பாறை மத்திய படை முகாம் பகுதியில் வசிக்கும் 25 குடும்பங்களுக்கு முன்னாள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் மற்றும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோரால் உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

24 வது படைபிரிவின் ஒருங்கிணைப்புடன் 16 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படையினர் அந்தந்த கிராம சேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந் நிகழ்வு 2022 ஜூன் 13 அன்று மத்திய படை தலைமையகத்தின் அம்பாறை தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

24 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டார். இந்த நிகழ்வில் 24 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 241 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சந்திர அபேகோன், சிவில் விவகார அதிகாரி மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.