20th January 2022 08:11:35 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் சேவையாற்றும் 35 இராணுவத்தினர் அடங்கிய குழுவினருக்கு விசேட ஆங்கில மொழிப் பயிற்சி அளிப்பதற்கான பாடநெறி யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பமானது.
வடக்கில் உள்ள இராணுவத்தினரிடையே ஆங்கில மொழிப் புலமையை மேம்படுத்தும் நோக்கில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பாவின் பணிப்புக்கமைய இப்பாடநெறி ஒரு மாத காலத்திற்கு நடாத்தப்படவுள்ளது.
இந்த பாடநெறியின் முதற் கட்ட அமர்வில் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் சஷிக பெரேரா அவர்களுடன் சில சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.