Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2022 09:11:35 Hours

143 பிரிகேட் படையினரால் புத்தளம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 14 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 143 வது பிரிகேட் படையினரால் கருவலகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில், பாடசாலை மற்றும் வலயக் கல்வி பணிமனை அதிகாரிகளுடனான ஆலோசனைக்கமைய புத்தளம் சாரிபுத்த ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், சீருடைகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை புதன்கிழமை (12) பகிர்ந்தளித்தனர்.

143 வது பிரிகேட் தளபதி கேணல் பௌமி கிட்சிலன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மேற்படி பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நன்கொடையுனை பங்களாதேஷில் வசிக்கும் திரு திஷான் ரம்புக்வெல்ல, திருமதி டிஸ்னி ரம்புக்வெல்ல, திரு ஆர்.பி. ரம்புக்வெல்ல, திருமதி பிரியந்தி ரம்புக்வெல்ல மற்றும் திருமதி மாலி பெரேரா ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.