27th September 2021 12:09:18 Hours
இலங்கை இராணுவத்தின் 36 வது பிரதி பதவி நிலை பிரதானியாக சனிக்கிழமை (25) பதவியேற்றுக்கொண்ட இலங்கை பீரங்கிப் படையின் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவிப்பதற்கான நிகழ்வு பனாகொடையிலுள்ள இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியின் தலைமையக வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்ய இலங்கை இராணுவ பீரங்கிப் படையின் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அதனையடுத்து அவரக்கு படையணி சிப்பாய்களினால் இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைவாக பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவவேற்பளிக்கப்பட்டது.
அதனையடுத்து படையணயின் அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதி பதவி நிலைப் பிரதானி 4 வது பீரங்கிப் படையின் அனைத்து நிலைகளுக்குமான விருந்தகத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார். மேற்படி நிகழ்வின் போது உரிய சுகாதார ஒழுக்குவிதிகள் கடைப்பிடிக்கப்பட்டன.