26th September 2021 22:39:01 Hours
கொவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான தேசிய தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் 11 வது படைப்பிரிவின் 2 வது (தொ) இலங்கை சிங்கப்படை படையினர் மற்றும் முதலாவது இலங்கை ரய்பல் படையினரால் கண்டி பகுதியில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் கெங்கல்ல மற்றும் புஷ்பதான கல்லூரிகளில் தடுப்பூசி நிலையங்கள் நிறுவப்பட்டிருந்ததோடு, இத்திட்டம் கடந்த ஒரு வார காலமாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின்படி பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் - 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இராணுவம் தற்போது தடுப்பூசி வழங்குவதற்கு அளிக்கும் வகையில் நடமாடும் தடுப்பூசி திட்டங்கள் நாடு முழுவதும் வழங்குவதில் உறுதியாக உள்ளது.